Posts

இது கதையல்ல...

                மனதில் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி, அதை கூற முயற்சிக்கும் போது... என்று எழுதிக் கொண்டிருக்கையில் தொண்டையில் எதோ சிக்கிக் கொண்டதுப் போல் இருந்தது. டேய்! தண்ணி குடிடா என்று குணா தலையை தட்ட பயத்துடன் திரும்பிய வேலு பதட்டதத்துடன் எப்பையும் கதவை தட்டிட்டு வர மாட்டியாடா என்று வார்த்தைகளை சிதறினான். நீ இன்னும் எழுதி முடிக்கலையா என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் குணா. மறுபடியும் மனதில் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி.. என்று எழுதியததை படித்து முடிப்பதற்குள் குணா வந்துவிட்டான். முடித்து விட்டாயா என்று குணா கேக்க..வேலு கோபத்துடன் நான் என்ன டெய்லி லவ் லெட்டர் எழுதி ஒரு பொண்ணுக்கு கொடுத்துட்டா இருக்கேன். பொறுமையாதான் எழுத முடியும் என்று கூறினான். உடனே குணா நம்ம டீலிங் உனக்கு ஞாபகம் இருக்குல்ல எனக்கு லவ் லெட்டர் எழுதி குடுத்தாதான் உன்னை இந்த வீட்டுக்குள்ள விடுவேன் என்று கூறிவிட்டு சென்றான். எப்படியோ தடுமாறி ஏதோ ஒரு கதையை கவிதையாக்கி வேலு குணாவிடம் கொடுத்தான். குணா அந்த கடிதத்தை தன் பாசமிகு காதலிக்கு கொடுக்க ஆவலாக விரைந்து செ...

Kabhi Khushi Kabhi Gham👨‍👩‍👦‍👦

Image
Kabhi Khushi Kabhie Gham(sometime happiness, sometime sadness) is my evergreen favourite flim and the most iconic movie of Karan Johar. It released in the year of 2001. The theme of the movie was "It's all about loving your parents". The summary of the movie: Yashvardhan Raichand (Amitabh Bachchan) is the well-distinguished and well-respected business man. He lives a lavish lifestyle with his wife Nandini (Jaya Bachchan) and their two sons Rahul (Shah Rukh Khan) and Rohan (Hrithik Roshan). Yash is firm on heritage, and traditions of his ancestors. Rahul is the eldest son adopted by Raichand at the age eight. He falls in love with Anjali (Kajol) who is the  patriotic person and have more pride on our nation. She leads a normal life with her father and sister Pooja (Kareena Kapoor)happily. The day after the death of her father, Rahul marries Anjali. Raichand could not accept the marraige so he ended his relationship with Rahul. After this happend Rahul and Anjali migrate...

கல்லூரியின் இறுதி நொடியில்...

Image
வாழ்வின் அற்புத பயணம் பள்ளிப் பருவம் கடந்து சுற்றி திரிந்த என் விழியின் இமைகள் உன் அழகில் மயங்கி, மலர்ந்தது கண்ட முதல் பார்வையிலே, என் சிவப்பு பேரழகியே. ஆம்.! நீயே என் கல்லூரி பயணத்தின் முதல் தடம். இல்லம் தொலைத்து கவலைக் கடலில் ஆழ்ந்த அந்த நொடியில் என் மனம் உன்னை ஏற்றுக் கொள்ள மறுத்தது சில திங்களுக்கு. ஆனால் என் துயரங்களுக்கு நீ அளித்த வெகுமதியோ அன்பு செடியில் முளைத்த பல கள்ளமற்ற உள்ளங்களைக் கொண்ட மலர்கள். மலர்களின் மணம் அறியாது சில காலங்கள் நான் கொண்ட தனிமையின் துயரங்களை என் விடுதியின் சுவர்கள் எடுத்துரைக்கும். ஆம்! அந்த கணங்கள் என் கண்ணீரை கண்டது அவை மட்டுமே. நாட்கள் ஓடின..கண்ணீரோ சில தோழமை கதிர் வீச்சினால் கானல் நீராகி என் பாலைவன கள்ளிச் செடியில் புன்னகை எனும் மலரை தோற்றுவித்தது. ஏற்றுக்கொண்டேன் உன்னை முழு மனதாக..கல்விக்காக மட்டும் அல்ல..நீ அளித்த பல பாச உள்ளங்களுக்காக.. இனி வரும் பொழுதுகள் அந்த பாச கிளிகளோடு உன் கூட்டிலே. அவ்வப்போது நவரசம் அனைத்தும் அரங்கேறும் அந்த வகுப்பறை நாடக மேடையில். அந்த திடலின் நாயகர்களும் யாமே.. ரசிகர்களும் யாமே. ஆசானும் அன்னையாய் மாறிய வகுப்ப...

இப்படிக்கு மகள்

Image
அந்தம் இல்லா உறவு பாரெங்கும் தோன்றும் உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வில் ஒரு முறைதான் உதயம் ஆனால் இவள் கதிரவனின் எழிலை வாகைச் சூடி தாய் என்ற நாமத்திற்கு உரியவளாகி வாழ்வின் மறு பிறவியை அடைந்து, புது அர்த்தத்தை கண்டாள் பத்து திங்கள் என்னை சுமந்து பெற்று.  இனி வாழ்வில் அவள் கடந்து செல்லும் அனைத்து மணித்துளிகளும் என்னை பற்றியதே. அன்று முதல் அவள் இரவும் பகலானது என்னை சீராட்டுவதற்கு.  ஆறு திங்கள் அவள் மடியே என் பஞ்சு மெத்தை. அவளின் மடியை விலக்கி பூமி தாயின் கரம் பற்றி நெஞ்சை கொண்டு முதல் முறை நான் இவ்வையகத்தில் நகர முயற்சிக்கும் தருணத்தில் அவள் நெஞ்சமும் பதை பதைத்தது அன்பின் பொறாமையில்.  நான் முழங்காலிட்டு முன்னேறிச் செல்லும் போது தவறு ஏதும் இழைக்காமலே என்னோடு  முழங்காலிட்டு என்னை வருடினாள்.  அங்கும் இங்கும் விழுந்தேன் என் தடம் பதிக்க. அந்த கணங்கள் ஆகாயத்தை விட அதிகமாய் நீ மனதில் கொண்ட வலிகளுக்கு நான் உடல் அளவில் அனுபவித்த வலிகள் சிறு நட்சத்திரங்களே. என் வாழ்வில் உன் கரம் கொண்டு என் தடம் பதித்து இவ்வுலகில் ஒளி வீச செய்தாய். 'மா..மா' என்ற மொழியே அறியாத என் தத்தளிப்பு உச்ச...

உனக்கென உதித்தவள்... ✨

Image
அத்தியாயம் 10 கண்டதும் காதல் மலரும்😍 மரத்தின் அருகே நிழலோடு நிழலாக நின்று கொண்டிருக்கும் வெண்பாவை பார்த்த மதி "வெ.. வெண்பா.." என்று தன் மெல்லிய குரலில் தயங்கி தயங்கி அழைத்தான்.  அவன் குரல் காற்றின் மூலம் இசையாய் அவள் காதுகளில் ஓத, சற்றென அலையாய் திரும்பிய அவளின் மதி போன்ற முகத்தின் கண்கள் அவன் கண்களோடு இணைந்தது. மதி அவள் கண்களின்  சிக்கி கொண்டவனாய் மௌனத்தின் உலகிற்கு பயணம் செய்தான். இந்த மௌனமே சில நிமிடங்கள் அலைக்கழித்தது. "உன் நண்பனின் கனவு நிறைவேறும் நேரம் வந்து விட்டது போலவே.."என்று வெண்பா தன் கன்னங்கள் சிவக்க முழு வெட்கம் கொண்டு கூறியவுடன் ஏதும் புரியாதவனாய் பல கேள்விகளுடன் வெண்பாவை பார்த்தான் மதி. "உன் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்றேன்.." என்ற கர்ஜனை குரல் கேட்டவுடன் குரல் வந்த திசையை நோக்கி திரும்புகிறான் மதி. "இனியன் நீயா..?" என்று கேள்விகள் நிறைந்த முகத்துடன் கேட்ட அவனுக்கு மேலும் கேள்விகளே அதிகரித்தன. "ஆமாம் நான்தான்.. நான் சொல்றேன் எல்லாம்.. "என ஆரம்பித்தான் இனியன். "உன்னை பார்த்த முதல் கணமே வெண்பா உன்னை விரும்...

உனக்கென உதித்தவள்... ✨

அத்தியாயம் 9 எண்ணங்கள் நிறைவேறுமா.?   ஜீவிகா திடீரென கடித்தத்தை நீட்ட அவள் இதுவரை யாரென தெரியாத மதி அதை வாங்குவதற்கு தயக்கம் கொண்டு நின்றிருக்கையில் "நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் அந்த கடிதத்தை என்னிடம் தான கொடுக்க சொன்னாங்க.. நீ என்ன இவன்ட கொடுக்குற.."என்று கோபம் நிறைந்த வார்த்தைகளை ஜீவிகாவிடம் வீசினான் இனியன். "அண்ணா உங்க கிட்ட கொடுக்க சொல்ல தான் இவங்க கிட்ட கொடுத்தேன்" என்று பவ்ய குரலில் கூறிவிட்டு அங்கு இருந்து நகர்ந்தாள் ஜீவிகா. இனியன் தன் பார்வையால் எதிரில் இருந்த மதியை எரித்தான். மதியும் அதற்கு சற்றும் குறையாமல் கோபக் கனலை வீசினான். அவர்களுக்குள் பார்வை கனல் முழுவதும் பற்றி எரிவதற்குள் அந்த இடத்தில் வெண்பா தோன்றி இனியனை அங்கு இருந்து அழைத்து சென்றாள். அன்று மாலை நிகழ்ச்சி தொடங்கியது மயிலின் அழகிய வரவேற்பு நடனத்துடன். அனைவரும் பங்கேற்றனர் அந்த அன்பு மற்றும் மகிழ்ச்சியின் சங்கமத்தில். நிகழ்வின் இறுதியில் வெண்பா நன்றியுரை கூறிய அந்த நளினம் மதியின் மனதில் மீண்டும் ஒரு மின்னலை ஏற்படுத்தியது. அன்று முதல் அவன் வெண்பாவை ஒரு நாளைக்கு ஒரு தடவையாது பார்த்து விடு...

உனக்கென உதித்தவள்... ✨

அத்தியாயம் 8 உணர்ச்சி கடலில்.. 🌊 கல்லூரி முழுவதும் நிகழ்ச்சிகான வேலைப்பாடுகள்  ஆரவாரத்துடன் நடந்துக் கொண்டிருந்தன. அனைவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை முழு ஈடுபாட்டுடனும், மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் செய்து வந்தனர்.  வெண்பாவும் தான் கல்லூரியில் அடி எடுத்து வைத்து நடைபெறும் முதல் நிகழ்வு என்பதால் தன்னை முழுவதுமாய் அர்பணித்து தன் பொறுப்புகளை சிறு குழந்தைப் போல ஒரு கள்ளமற்ற உள்ளத்துடன் அங்கும் இங்கும் ஓடி ஆடி அரங்கேற்றி வருகிறாள். அவள் அரங்கேற்றம் நடக்கும் அந்த திடலைத் தன் தோழிகளுடன் சிரித்து பேசியவாறு மலர்கள் கொண்டு  அலங்கரிக்கும் தருணத்தில் அவ்வழியே தன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே மதி கடந்து செல்கிறான்.  வெண்பாவின் அந்த புன்னகைச் சத்தம் அவன் கால்களை கட்டி போட்டது மட்டும் அல்லாமல் அவன் பார்வையையும் அவள் பக்கம் திருப்பியது. அவனின் இதயம் வழக்கத்தை விட அதிகமாக துடித்தது. அருகில் இருந்த நண்பர்களின் கேளிக்கை சத்தம் அவன் காதுகளுக்கு இசையாய் ஒலித்தது. வெண்பா அவன் கண்களுக்கு மலர்களின் நந்தவனத்தில் மலரும் ஒரு மலராகவே காட்சி அளித்தாள். அவன் இதுவரை அனுபவிக்காத ஒ...